புதுச்சேரி

உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், உடல் உறுப்பு தானம் செய்த கே. வரதனின் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

உடல் உறுப்பு தானத்தின் மூலம் பலரது வாழ்க்கைக்கு உதவும் உயரிய சேவையை செய்த கே. வரதனின் குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில், அவர்களது சார்பில் கிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ந. ரங்கசாமி நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பிறருக்கு வாழ்வளிக்கும் இந்த உயரிய மனிதநேயப் பணியை பாராட்டும் வகையிலும் இந்த கவுரவம் வழங்கப்பட்டது.

விழாவில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன