விளையாட்டு

விழுப்புரத்தில் முதலமைச்சர் கோப்பை மண்டல மல்லர் கம்ப போட்டி: மாணவ, மாணவிகள் அசத்தல் வெற்றி!

விழுப்புரம்: தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக, மண்டல அளவிலான மல்லர் கம்ப போட்டிகள் விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் தொடங்கி வைத்தார். இதில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்று தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தினர்.

பள்ளி மாணவர்கள் பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் எல். மணி தர்ஷன் முதலிடத்தைப் பிடித்து அசத்தினார். நந்தகுமார் இரண்டாம் இடத்தையும், அகிலன் மூன்றாம் இடத்தையும், பிரணித்குமார் நான்காம் இடத்தையும் கைப்பற்றி சாதனை படைத்தனர்.

அதேபோல் பள்ளி மாணவிகள் பிரிவில் முத்தரசி முதலிடத்தையும், பிந்துஸ்ரீ இரண்டாம் இடத்தையும் வென்றனர். ஹரியாசினி மூன்றாம் இடத்தையும், மோனிதா நான்காம் இடத்தையும் பிடித்தனர். ஒன்பது மாவட்டங்கள் பங்கேற்ற இந்த மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்று முன்னணி இடங்களைப் பிடித்த மாணவர்கள் அனைவரும் அடுத்த கட்ட மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன