தமிழ்நாடு
நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மற்றும் நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
In brief (English)
Heavy rainfall accompanied by thunderstorms is predicted for several hilly districts in Tamil Nadu including Nilgiris, Theni, and Kanyakumari.
