தேசியம்

விநாயகர் சதுர்த்தி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு!

புதுதில்லி: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் இல்லத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு விநாயகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தார்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுதில்லியில் உள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலின் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் பிரதமர் மோடி பயபக்தியுடன் பங்கேற்று வழிபட்டார். நாடு முழுவதும் அமைதி, வளம் மற்றும் செழிப்பு பெருக விநாயகப் பெருமான் அருள்புரிய வேண்டும் என்று அவர் பிரார்த்தித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன