தேசியம்
காமன்வெல்த் விளையாட்டு வீரர்களை பாராட்டிய பிரதமர் மோடி

கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் வீரர் குழுவினரை பிரதமர் நரேந்திர மோடி, புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சந்தித்து உரையாடினார்.
வீரர்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, எடைதூக்கும் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானுவுடன் நேரடியாக உரையாடி, அவரது சாதனைகளைப் பாராட்டினார்.