புதுச்சேரி

வில்லியனூர் ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலய சதுர்த்தி விழா: ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய எம்.எல்.ஏ பா.ரவிக்குமார்!

புதுச்சேரி: வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட வெண்ணி சாமி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் பா.ரவிக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவில் திருப்பணிகள் மற்றும் விழா முன்னேற்பாடுகளுக்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) ரொக்க நன்கொடையை கோவில் நிர்வாகத்தினரிடம் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோவில் விழாக் குழுவினர் மற்றும் அப்பகுதி ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாகக் கொண்டாடினர். ஆலய வளர்ச்சிக்கு சொந்த நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் பா.ரவிக்குமாருக்கு கோவில் நிர்வாகத்தினரும் பொதுமக்களும் தங்களது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன