புதுச்சேரி

புதுச்சேரி ஏம்பலத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா: எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் முன்னெடுப்பு

புதுச்சேரி, செப். 8: புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட உள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியின் நல்லாசியுடன், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ. மோகன்தாஸ் தலைமையில் இந்தத் திறப்பு விழா செப்டம்பர் 9-ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை ஏம்பலம் நான்கு முனை சந்திப்பு அருகே மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

தொகுதி மக்களின் நலன் மற்றும் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் நோக்கிலும், அரசு திட்டங்களை எளிதில் கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொகுதி மக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களை நேரடியாக வழங்கி பயன்பெற முடியும்.

இவ்விழாவில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஏம்பலம் தொகுதி பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு ஏம்பலம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன