ஆன்மீகம்

பஞ்சவடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம்: அறங்காவலர் தகவல்

புதுச்சேரி/திண்டிவனம்:

புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்சவடி ஸ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள், திருமஞ்சனம் மற்றும் அன்னதான நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அறங்காவலர் கோதண்டராமன் வெளியிட்டுள்ள தகவலில், வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை சுப்ரபாதம், சிறப்பு திருமஞ்சனம், தோமாலை சேவை மற்றும் மகா அர்ச்சனைகள் முறைப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மூலவருக்கு விசேஷ புஷ்ப அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். அன்றைய தினங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளதுடன், காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை விரிவான அன்னதானம் வழங்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன