தமிழ்நாடு
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் கனமழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விழுப்புரம், ஆக. 20: விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை பலத்த இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. பல நாட்களாக நிலவி வந்த கடுமையான வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். எனினும், திடீரென பெய்த இந்த மழையினால் நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மாலை நேரத்தில் பெய்த இந்த மழையினால் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். பலத்த இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ததால் மின் விநியோகத்தில் அவ்வப்போது தடங்கல்கள் ஏற்பட்டன.


