தேசியம்

‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் தேசிய கீதத்துக்கு இணையான சட்டப் பாதுகாப்பு!

புது தில்லி, ஆகஸ்ட் 11: ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலுக்கு இனி தேசிய கீதமான ‘ஜன கண மன’வுக்கு உள்ள அதே சட்டப் பாதுகாப்பு கிடைத்துள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 11) ‘தேசிய கௌரவத்தை அவமதிப்பதைத் தடுக்கும் (திருத்த) மசோதா, 2026’-க்கு ஒப்புதல் அளித்தார்.

இந்தத் திருத்தச் சட்டத்தின்படி, ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடும்போது வேண்டுமென்றே இடைஞ்சல் செய்வதோ, அவமதிப்பதோ குற்றமாகக் கருதப்படும். இத்தகைய செயல்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

முதல் முறையாகக் குற்றம் செய்தவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம். இரண்டாம் முறையோ அதற்கு மேற்பட்டோ குற்றம் செய்தவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை கட்டாயமாகும்.

1971-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘தேசிய கௌரவத்தை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம்’ தற்போது தேசியக் கொடி, தேசிய கீதம் மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றைப் பாதுகாத்து வருகிறது. இந்தப் புதிய திருத்தம் ‘வந்தே மாதரம்’ பாடலையும் இதன் கீழ் கொண்டு வருகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன