புதுச்சேரி

மணவெளி செல்வ முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம்: அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு

வில்லியனூர் தொகுதி மணவெளி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவையொட்டி செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

காப்பு கட்டி வழிபாடு

விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஆ. நமச்சிவாயம், பாரம்பரிய முறைப்படி காப்பு கட்டி, அலகு குத்தி அம்மனை தரிசித்து வழிபட்டார்.

திரளான பக்தர்கள் பங்கேற்பு

இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்ததுடன், தங்களது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர். இந்நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *