தமிழ்நாடு

அமித் ஷா வருகையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு; கேமரா கண்ணாடியுடன் வந்த இருவரிடம் விசாரணை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திருவண்ணாமலை வருகையையொட்டி, அண்ணாமலையார் திருக்கோவில் வளாகத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமித் ஷா ரமண மகரிஷி ஆசிரமத்தில் வழிபாடு செய்த பிறகு, அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதால் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இருவர் கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடியை அணிந்து கோவிலுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகளைப் புகைப்படம் எடுக்க முயன்றதாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருக்குச் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, இருவரையும் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடம் இருந்த கேமரா கண்ணாடி மற்றும் செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். கோவில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிக் காட்சிகளைப் பதிவு செய்ய முயன்றார்களா, வேறு ஏதேனும் நோக்கம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் கருவறை மற்றும் சன்னதிப் பகுதிகளில் புகைப்படம், வீடியோ பதிவு செய்ய பொதுவாக அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன