புதுச்சேரி
அமித் ஷா வருகை: புதுச்சேரியில் மதுக்கடைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகையை முன்னிட்டு, அவரது பயண வழித்தடங்களில் உள்ள மதுக்கடைகளைத் தற்காலிகமாக மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 6 மணி முதல் கடைகள் மூடப்படும். தொடர்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, அமித் ஷா செல்லும் வழித்தடங்களில் செயல்படும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீராக நிர்வகிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகை தொடர்பான ஏற்பாடுகள் குறித்து பாஜக மாநில அலுவலகத்தில் முன்னதாக ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றிருந்தது.
