புதுச்சேரி

புதுச்சேரியில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை பதிவு முகாம்: நாளை 4 இடங்களில் நடக்கிறது!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சுகாதார முகமை (State Health Agency) சார்பில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான ‘ஆயுஷ்மான் வய வந்தனா’ திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நாளை (செப்டம்பர் 4) நடைபெறுகிறது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு விரிவான மருத்துவக் காப்பீடு வழங்கும் வகையில் ‘ஆயுஷ்மான் வய வந்தனா’ அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் தகுதியுடைய பயனாளிகள் எளிதாகப் பதிவு செய்து பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு முகாம்கள் முத்துப்பிள்ளைபாளையம், திருவாண்டார்கோவில், மேட்டுப்பாளையம் மற்றும் லாஸ்பேட்டை ஆகிய 4 இடங்களில் உள்ள மையங்களில் நடைபெற உள்ளன. 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களது உரிய ஆவணங்களுடன் இந்த மையங்களுக்கு நேரில் சென்று அட்டையைப் பதிவு செய்துகொள்ளலாம்.

எனவே, குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த 70 வயது நிரம்பிய தகுதியுடைய மூத்த குடிமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையைப் பெற்று பயனடையுமாறு புதுச்சேரி மாநில சுகாதார முகமை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன