தேசியம்

ரஷ்ய அதிபருக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் பரிசு: பிரதமர் நரேந்திர மோடி அசத்தல்!

புது தில்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வருகை தந்துள்ள ரஷ்ய அதிபருக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழின் பெருமையைப் போற்றும் வகையில் திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலைப் பரிசாக வழங்கியுள்ளார்.

தலைநகர் தில்லியில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது, உலகப் பொதுமறையாம் திருக்குறளின் சிறப்பு மற்றும் அதன் உலகளாவிய விழுமியங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த அரிய பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. சர்வதேச அரங்குகளில் தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு மற்றும் தமிழ் இலக்கியங்களின் மேன்மையை தொடர்ந்து முன்னிறுத்தி வரும் பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

செம்மொழித் தமிழின் வாழ்வியல் நெறிமுறைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் திருக்குறள், ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ரஷ்ய அதிபருக்கு பரிசளிக்கப்பட்டிருப்பது உலகத் தமிழர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன