தமிழ்நாடு
முதலமைச்சர் விஜயை சந்தித்த மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் மேம்பாட்டுக் குழு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (13.8.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள வருவாய் மேம்பாட்டுக் குழுவின் தலைவரும், ஒன்றிய திட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் மாண்டேக் சிங் அலுவாலியா சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் கே.பி. கிருஷ்ணன், திரு. அர்பிந்த் மோடி, திரு. நஜிப் ஷா, இ.வ.ப (ஓய்வு), டாக்டர் எம். சுரேஷ் பாபு ஆகியோரும் கலந்துகொண்டனர்.

