தமிழ்நாடு
80-வது சுதந்திர தினம்: தமிழ்நாடு காவல் துறை 20 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள்

புது தில்லி, ஆகஸ்ட் 14: 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறையின் 20 அதிகாரிகளுக்கு இந்திய அரசு குடியரசுத் தலைவர் சிறப்புச் சேவைப் பதக்கம் (PSM) மற்றும் சிறந்த சேவைப் பதக்கம் (MSM) வழங்க அறிவித்துள்ளது.
இதில், 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் சிறப்புச் சேவைப் பதக்கமும், 17 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைப் பதக்கமும் வழங்கப்படுகிறது.
குடியரசு தினம் (ஜனவரி 26) மற்றும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) ஆகிய இரு நிகழ்வுகளின்போது ஆண்டுக்கு இருமுறை இந்திய அரசு இந்தப் பதக்கங்களை வழங்கி வருகிறது.

