புதுச்சேரி

புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

புதுச்சேரி: வளிமண்டலக் கீழ் அடுக்கு காற்று குவிவு (Convergence) காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் தற்போது பரவலாக மிதமான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய வானிலை நிலவரப்படி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மேகமூட்டம் தீவிரமடைந்து ஆங்காங்கே மிதமான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வளிமண்டலக் காற்றின் ஒருங்கிணைப்பு நிகழ்வு காரணமாக இந்த மழைப்பொழிவு பதிவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து நள்ளிரவு மற்றும் விடியற்காலை வேளையில் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரவு நேரப் பயணங்களின் போது பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன