தேசியம்

சின்குஃபீல்டு கோப்பையில் பிரக்ஞானந்தா அபார வெற்றி

கிராண்ட் செஸ் டூர் தொடரின் சின்குஃபீல்டு கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளார்.

மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரிடம் கடினமான தோல்வியை சந்தித்த பிரக்ஞானந்தா, நான்காவது சுற்றில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபோரெஸ்டை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சிறப்பான நகர்வுகளுடன் விளையாடிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தினார்.

ஆட்டத்தின் போது ஜோர்டன் வான் ஃபோரெஸ்ட், ஒரு கோட்டையை, யானையை மற்றும் சிப்பாயை பெறுவதற்காக ராணியை தியாகம் செய்தார். எனினும், அந்தத் திட்டத்தை திறம்பட எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, ஆட்டத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார்.

நான்கு சுற்றுகள் முடிவில் 2.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா புள்ளிப்பட்டியலில் கூட்டாக இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்னும் 5 சுற்றுகள் மீதமுள்ள நிலையில், அடுத்த சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் வெஸ்லி சோவை கருப்பு காய்களுடன் பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன