தமிழ்நாடு
இல்லத்தரசிகளுக்கு நகர்ப்புற வீட்டுத் தோட்டம் திட்டம்: ₹10 கோடியில் அமல்
நச்சுத்தன்மையற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்தி செய்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய வீட்டுத் தோட்டம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராமப்புற வீடுகளில் செடி வளர்ப்பு பைகள், செங்குத்து தோட்டம் மற்றும் நீரியல் தோட்டம் ஆகியவை ஊக்குவிக்கப்படும். காய்கறி, பழங்கள் மற்றும் மூலிகை செடிகளை வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறைவதுடன் மன அமைதியும் கிடைக்கும். நடப்பாண்டில் இத்திட்டம் ₹10 கோடி மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்பட உள்ளது.
In brief (English)
Tamil Nadu has introduced a ₹10 crore scheme to encourage residents in urban and rural areas to grow organic vegetables and fruits at home.