தமிழ்நாடு

“திரள் நிதியில் ஒரு ரூபாயைக் கூடத் தொட மாட்டேன்”: பென்ஸ் கார் விமர்சனத்திற்கு சீமான் விளக்கம்

பென்ஸ் கார் தொடர்பான விமர்சனங்களுக்கு, “திரள் நிதியில் வந்த ஒரு ரூபாயாலும் நான் தேநீர் கூட அருந்த மாட்டேன்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

மக்களிடம் திரள் நிதி கேட்கும் தலைவர், விலை உயர்ந்த காரைப் பயன்படுத்துவதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் இதற்குப் பதிலளித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் பேசிய அவர், “என் சொந்த வருமானத்திலிருந்துதான் நான் எந்தச் செலவையும் செய்வேன். கட்சிக்காக மக்கள் தரும் திரள் நிதியை முழுவதும் கட்சிப் பணிகளுக்கும் தேர்தல் செலவுகளுக்கும் பயன்படுத்துகிறோம். அந்த நிதியிலிருந்து ஒரு தேநீருக்குக் கூட நான் செலவு செய்ய மாட்டேன்” என்று கூறினார்.

“ஒரு தலைவருக்குத் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பப் பொறுப்புகள், சொந்தச் செலவுகள் இருக்கும். கட்சிக்கு மக்கள் நிதி தருகிறார்கள் என்பதற்காக, தனிப்பட்ட செலவுகளுக்கெல்லாம் யாரிடமும் கணக்குக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆனால் அந்த நிதியில் ஒரு ரூபாய் கூடத் தவறான இடத்தில் போகக் கூடாது; அதற்கான பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன்” என்று சீமான் வலியுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *