புதுச்சேரி

நேபாள பெருவெள்ளத்தில் மாயமான புதுச்சேரி வாசிகள் 3 பேர்: பத்திரமாக மீட்க துணைநிலை ஆளுநரிடம் வைத்திலிங்கம் எம்.பி., உறவினர்கள் நேரில் கோரிக்கை!

புதுச்சேரி: நேபாள நாட்டில் அண்மையில் ஏற்பட்ட கடும் பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று நபர்களைப் பத்திரமாக மீட்கக் கோரி, அவர்களின் குடும்பத்தினர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதனை மக்கள் மாளிகையில் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர்.

வெள்ளப் பெருக்கில் மாயமான புதுச்சேரி வாசிகள் மூவரையும் பத்திரமாக மீட்டு மீண்டும் புதுச்சேரிக்கு அழைத்து வர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீருடன் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஆளுநர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதுகுறித்துத் தெரிவித்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், “நேபாளத்தில் உள்ள புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக மத்திய அரசு, நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்துடன் தாமும் அதிகாரிகளும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம்” என்று தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது அரசுச் செயலர் மற்றும் புதுச்சேரி டெல்லி இல்லத்தின் உள்ளிருப்பு ஆணையர் (Resident Commissioner) பங்கஜ் குமார் ஜா உடனிருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன