புதுச்சேரி
புதுச்சேரி வருவாய்த்துறையில் 4 பேருக்கு கிராம நிர்வாக அதிகாரி பணி நியமன ஆணை: முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
புதுச்சேரி: புதுச்சேரி வருவாய்த்துறையில் தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு கிராம நிர்வாக அதிகாரி (VAO) பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் என். ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி அரசு வருவாய்த்துறையில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 4 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் என். ரங்கசாமி கலந்து கொண்டு, தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.