புதுச்சேரி

புதுச்சேரி மீனவர்களை மீண்டும் MBC பட்டியலில் சேர்க்க வேண்டும்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தல்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மீனவ சமுதாய மக்களை EBC பட்டியலிலிருந்து நீக்கி, ஏற்கனவே இருந்தது போல மீண்டும் MBC பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்திப் பேசினார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதுகுறித்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவ சமுதாய மக்கள் EBC பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதால் பல்வேறு நிலைகளில் அரசு வேலைவாய்ப்புகளைப் பெற முடியாமல் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றார். அரசுப் பணிகளுக்கான இடஒதுக்கீட்டுப் பலன்கள் கிடைக்காமல் இளைஞர்கள் தவித்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.

எனவே, மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவர்களை உடனடியாக EBC பட்டியலிலிருந்து விடுவித்து, மீண்டும் MBC பட்டியலில் இணைக்க அரசு உரிய கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன