தமிழ்நாடு

நீர்வளத் திட்டப் பணிகளை காலக்கெடுவுக்குள் முடிக்க அமைச்சர் ந.ஆனந்த் உத்தரவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெறும் நீர்வளத் திட்டப் பணிகளை காலக்கெடுவுக்குள் தரமான முறையில் முடிக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ந.ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை நீர்நிலைகள் சீரமைப்பு

சென்னை, கலைவாணர் அரங்கில் நீர்வளத்துறையின் பல்வேறு திட்டப் பணிகள், நீர்நிலைகள் பராமரிப்பு, தூர்வாரும் பணிகள், வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிமராமத்து பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அமைச்சர் ந.ஆனந்த், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகள் சீரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.

கள ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

மழைக்காலத்தை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நீர்நிலைகளின் நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்கும் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பணிகளை முடிக்கவும், திட்டங்களின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கள ஆய்வு செய்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, துறை சார்ந்த மூத்த அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் ஆதாரம்: நீர்வளத்துறை, தமிழ்நாடு அரசு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *