தமிழ்நாடு

சேலம் கல்லூரியில் TNPSC போட்டித் தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சேலம் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல் மற்றும் கல்வி மேன்மை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியும் தமிழன் அகாடமியும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின.

இதில் அரசுப் பணி வாய்ப்புகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் முறைகள் மற்றும் இலக்கை அடைவதற்கான மனப்பாங்கு குறித்து மாணவிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

தேர்வுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கல்லூரித் தாளாளர் கே. சத்தியமூர்த்தி, மாணவிகளின் அரசுப் பணி கனவை நனவாக்க இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய தனியார் கல்லூரி கூட்டமைப்பின் தாளாளர் கே. துரைசாமி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தொடர்ச்சியான உழைப்பு, திட்டமிட்ட படிப்பு மற்றும் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தும் பழக்கம் அவசியம் என வலியுறுத்தினார்.

பயிற்சி வாய்ப்புகளைப் பயன்படுத்த அறிவுறுத்தல்

கல்லூரி வழங்கி வரும் பயிற்சி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் மாணவிகள் வெற்றி பெற வேண்டும் என்று துணை முதல்வர் பழனியம்மாள் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் நடைபெற்ற கேள்வி–பதில் அமர்வில் பாடத்திட்ட அமைப்பு, தேர்வுத் திட்டமிடல் மற்றும் தேர்வு எழுதும் நுணுக்கங்கள் குறித்த சந்தேகங்களை மாணவிகள் கேட்டுத் தெளிவு பெற்றனர். இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *